பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
எஸ்.ராமகிருஸ்ணன்
உயிர்மை பதிப்பகம்
விலை 180/- டிசம்பர் 2008 முதல் பதிப்பு.
எஸ்.ராமகிருஸ்ணன் அவர்களை அறிமுகப்படுத்தியது மின்னிதழ் பரிசாகக் கொடுத்த நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற கதை தொகுப்பிலிருந்த புனைவு கதைகள்தான், பிறகு சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுக் கொண்டுருக்கிறேன். சரசரவென மனதில் பதியும் இவர் பேச்சால் தீவிர வாசகியாக உறுபசி, நிமித்தம் என்ற நாவல்களை வாசிக்க ஆரமித்த முப்பது பக்கங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. உறுபசி இலக்கியம் படித்து வேலையின்றி வறுமையில் வெறுமையில் வாழ்ந்த இளைஞனின் இறப்பிலிருந்து தொடங்கி அவன் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்கிறது... அடர்த்தியை உள்வாங்க முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டேன். பின் நிமித்தம் அதைப் படிக்க மிகுந்த மனதைரியம் தேவைப்பட்டது. வாய் பேச கேட்க முடியாத ஒரு ஆணின் உலகத்திற்குள் தர தரவென அழைத்துச் செல்கிறது. அதையும் முப்பது பக்கங்களுக்குள் மூடி வைத்து விட்டேன். நாவல் மூலம் வேறொருவர் வாழ்வை எட்டிப் பார்க்க மட்டுமே செய்கிறோம் என்ற வாதத்தை இந்த நாவல்கள் உடைத்து விட்டது. நம் ஒருவர் வாழ்க்கையை வாழவே வலிமையற்ற போது இவரது நாவல்கள் மூலம் மற்றொருவராக வாழ்வது மிக மிகக் கடினம். எனது இந்தியா என்ற வரலாற்று நூல் தற்போது வாசிப்பில் உள்ளது இதில் குறிப்பிட்டிருக்கும் நில அளவை குறித்த விபரங்கள், ஐஸ் அவூஸ் பற்றிய குறிப்புகள் இதுவரை கேள்விபடாதது இந்த நூலை படிக்காவிட்டால் என் வாழ்நாளில் இந்தியா குறித்த பல தகவல்கள் தெரிந்து கொள்ளப் படமாலே போயிருக்கும். நாவலுக்கு முன்பு சிறுகதைகள் தொகுப்புகளையாவது முடிப்போமென்று பதினெட்டாம் நூற்றாண்டின் மழை நூலில் விழுந்தேன்.
கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு என்பதாகத் தொடங்கும் அவர் முன்னுரை சுவாரசியமான நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துகின்றன. சில வரிகளை மறுபடி மறுபடி வாய் வாசித்துக் கொண்டிருக்க மனம் கதையிலிருந்து விடுபட்ட பட்டம் போலப் பல சம்பவங்களின் முடிச்சுகளைப் பற்றி அசை போட வைக்கிறது. பல இதழ்களில் வெளிவந்த கதைகள் தொகுப்பப்பட்ட இந்த நூலில் 27 சிறுகதைகள் 27 பிம்பங்களைப் பிரதிபலிக்கும் சமூகக் கட்டமைப்புகளாக விரிகிறது. சோகத்தைத் தருமா சந்தோசத்தைத் தருமா என்ற எண்ண ஓட்டங்களில் தொடங்கிய எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் உபயோகித்த மொழியும் சமபவ கோர்வைகளும் கதாப்பாத்திரங்களின் நளினங்களும் புனைவின் சாரங்களும் அதிகமாக என்னை ஈர்த்தது என்று சொல்லலாம்.
வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை என்ற கதையில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவை மட்டுமே தெரிகிற ஒரு மனிதனுக்கு அது ஒரு வியாதியாகத் தெரிந்து பின் அதுவே வரமாகத் தெரிவதாகக் கதை முடிந்தாலும் அதைச் சுற்றி பலவாறு சிந்திக்க வைக்கும் வாக்கியங்கள் மனசாட்சியை உலுக்குவது உண்மை. '' உண்மையில் உலகம் எதற்காக இத்தனை பெரிதாகவும் தொடர்பற்ற ஆயிரக்கணக்கான இயக்கங்களோடும் இருக்கிறது, அதனால் தனக்கு என்ன பலன் என்ற சலிப்பு வந்தது'' என்ற வாக்கியம் எத்தனை அபத்தமாகச் சுயநலம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. என்னைச் சாம்பல் கிண்ணம் போல உபயோகிக்கிறார்கள் என்ற கதையில் அடையாளமில்லாத ஒரு ஆண் எவ்வாறொல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது (எடுபிடியென்று சிலர் வைத்திருப்பார்களே அதைப் போல). அவனே அநீதிகள் பற்றி மூன்று கற்பனை கதைகளைச் சொல்லி இதில் பொய் பெயர்கள் இருந்தாலும் அதில் உங்களில் யார் பெயராக மாற்றினாலும் அதை உண்மையாக்கி கொள்ளலாமென்று சொல்லி நமக்கும் சாம்பல கிண்ணமாகிறான். வரலாற்றில் கால் பதித்த ஓரினச் செயற்கையாளர்களான கில்ஜி - மாலிக்காபூரின் அழிவு, பூமியின் கண்களே குளங்கள் என்ற சித்தார்த்தர் புத்தரான சம்பவங்களைப் புனைவுகளாக்கி சுவைபடக் கொடுத்துள்ளார்.
பிறந்து வளர்ந்த கிராமத்தில்தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கும் வயதானவரிகளின் எண்ணப் போக்கை பற்றியும் இரு கதைகள் பேசுகின்றன. தங்களை அடிக்கும் ஆண்களுக்கு உடல் நிலை சரியில்லையென்றாலும் கடவுளிடம் மன்றாடும் பெண்களின் செய்கையை அப்படியே பிரதிபலிக்கிறது காதுள்ள கடவுள் கதை. செளந்திரவல்லியின் மீசை, 40 வயதில் பிறந்தநாள் வாழ்த்து கூடப் பெற முடியாத இரு குழந்தைகளின் தாய் ஜி சிந்தாமணி ஒரு நாள் பிடித்த நடிகை தேவிகாவாகப் பிடித்த இடத்திற்குச் சென்று பிடித்ததைச் சாப்பிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும் போது காட்டும் ஏக்கம், ஆண்களின் தெருவில் வீட்டிற்குள்ளே வாழ்ந்து இறக்கும் தாய், அலுவலகபணம் ஆறு லட்சத்தைத் தொலைத்த ஒருவரை புறக்கணிக்கும் அலுவலகர்கள் நண்பர்கள் மனைவி மக்கள், சுவருக்குள்ளே வீட்டின் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அம்மாவை போன்ற ஆணி, அன்பை உணராமல் அதிசயத்தைப் பரிசளிக்கப் பொருளை தேடும் கணவன் மனைவி, தோல்வியை மட்டுமே சிந்தித்துத் தீப்பெட்டியை வீணாய் உரசியே பொழுதை கழிப்பவரின் தனிமை போக்க தீக்குச்சி எரியும் போது வரும் சிறு மஞ்சல் கொக்கு, அருவருக்கத் தக்க தன்னை விற்றுக் கொள்ளும் கம்பிளி பூச்சியைத் தின்னும் நம்மிள் ஒருவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகளின் வழி நடப்பில் நம்மோடு உலகில் வாழும் உயிர்களை வரிசையாக அடுக்கி கொண்டே செல்கிறார்.
அப்பா புகைக்கிறார், உதிரி பொய்கள் என்னும் கதைகளில் குழந்தைகளின் பால்யத்தில் படும் காயம் ஆறாமல் அதைச் சுற்றி எரியும் நெருப்பாகக் கனன்று கொண்டேயிருப்பதை ஏதார்த்தமாகச் சொல்லி முகத்தில் அறைகிறார். இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன என்பது மிக மிக்கியமான கதை. கர்ப்பம் தரித்தபின் சண்டை அதிகமிட்டதால் அழுதாலோ என்னவோ தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தை பேசாமல் எதையோ வெறித்தப்படியே இருக்கிறது. பல இடங்களுக்குச் சுற்றியபிறகு பறவையின் சத்தத்தைக் கவனிக்கிறாள் என்பதை உணர்ந்து விதவிதமான பறவைகளைக் காண அலைகிறார்கள் ஒரிரு சொற்களைப் பேசுகிறாள் இன்னும் அவளைப் பேச வைக்கக் கூடிய பறவைகள் இருக்கின்றன அவற்றைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. மற்றொரு கதை விசித்ரி 12 வயதில் பின் மதியத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் உடலில் துணி இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்தவள் தினமும் முப்பது உடைகளை அணிந்து கொள்கிறாள் சணலால் கட்டி கொள்கிறாள் மேலும் ஒரு படி போய்ச் சதையோடு துணியைத் தைக்க முயல்கிறாள் 47 வயது வந்தும் இப்படியே அவள் இருப்பதற்கு அவள் ஊர் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ அந்த ஆள் மேசமானவன் இவன் அந்த விசயத்தில் வீக் என்று பலரை சந்தேகிக்கிறது. இறுதிவரை தெரியாத அந்தச் சம்பவத்தால் பின் மதியத்தில் வக்கிர எண்ணங்களைக் காட்டும் கணக்கற்றோரை இன்னும் கண்டும் காணாமலும்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
முத்தாய்ப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ஆழமாகக் காட்டை வர்ணிக்கிறது. வலேசா மதம் மாற்றுவதற்காகப் பழங்குடியினரின் குடியிருப்புக்குச் செல்கிறான் அவர்களின் மொழியைக் கற்ற பிறகு பிரசங்கிக்கலாம் என்று கற்கிறான் ஒவ்வொரு பெளர்ணமிக்கு பிறகும் அது மறந்துவிடும் அது எங்கள் முன்னோர்கள் அவர்கள் நாக்கில் வந்து போகிறார்கள் என்கிறார்கள். மீண்டும் முயல்கிறான் ஏட்டில் பிரதி எடுக்கிறேன் மீண்டும் மறக்கிறான் வெறிபிடித்தவன் போல மொழை எப்படியாவது கற்க வேண்டுமெனக் காடெங்கும் அழைகிறான் அதிகமான மழை பொழிகிறது பிறகுதான் கவனிக்கிறான் காடும் அவர்களின் மொழியில் மனிதனை போல இணைந்திருக்கிறது. முதலில் காட்டைப் பற்றி அறிய வேண்டி செடி கொடிகளோடும் உலாவுகிறான் வானத்தை அறிகிறான் ஒரு பழங்குடி பெண்ணோடு கலக்கிறான் நோய் வந்து சாகக் கிடப்பவனைக் காப்பாற்றி நோயை ஆமைக்கு மாற்றி விடுகிறார்கள். பிரசங்கம் மதமாற்றம் மறந்து அவர்களின் ஒருவனாகி அவர்களோடு வேட்டைக்குச் சென்ற பிறகு மிசனரியிலிந்து வந்து விசாரித்து விட்டு செல்கிறார்கள். பிறகு காணாமல் போய் விடுகிறான். அவர்களின் மொழியைக் கற்க வந்தவன் அவர்களின் மொழியாக அவன் வாரிசின் நாக்கில் பேசப்படப் போகிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லி செல்கிறது கதை. வனத்துக்கும் பழங்குடியினருக்கும் இருக்கும் புரிதலை கதையெங்கும் குறித்துக் கொண்டே வருகிறார். ஒவ்வொரு வரியும் குறிப்பால் உணர கூடியவை உவமைகள் தளும்பி நிற்கும் எதிர்பார்ப்பை உரசி கற்பனைக்குச் சிறகு கொடுக்கிறது.
பதினொட்டாம் நூற்றாண்டின் மழை என்னை நீந்த அனுமதித்திருக்கிறது.
எஸ்.ராமகிருஸ்ணன்
உயிர்மை பதிப்பகம்
விலை 180/- டிசம்பர் 2008 முதல் பதிப்பு.
எஸ்.ராமகிருஸ்ணன் அவர்களை அறிமுகப்படுத்தியது மின்னிதழ் பரிசாகக் கொடுத்த நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற கதை தொகுப்பிலிருந்த புனைவு கதைகள்தான், பிறகு சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுக் கொண்டுருக்கிறேன். சரசரவென மனதில் பதியும் இவர் பேச்சால் தீவிர வாசகியாக உறுபசி, நிமித்தம் என்ற நாவல்களை வாசிக்க ஆரமித்த முப்பது பக்கங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. உறுபசி இலக்கியம் படித்து வேலையின்றி வறுமையில் வெறுமையில் வாழ்ந்த இளைஞனின் இறப்பிலிருந்து தொடங்கி அவன் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்கிறது... அடர்த்தியை உள்வாங்க முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டேன். பின் நிமித்தம் அதைப் படிக்க மிகுந்த மனதைரியம் தேவைப்பட்டது. வாய் பேச கேட்க முடியாத ஒரு ஆணின் உலகத்திற்குள் தர தரவென அழைத்துச் செல்கிறது. அதையும் முப்பது பக்கங்களுக்குள் மூடி வைத்து விட்டேன். நாவல் மூலம் வேறொருவர் வாழ்வை எட்டிப் பார்க்க மட்டுமே செய்கிறோம் என்ற வாதத்தை இந்த நாவல்கள் உடைத்து விட்டது. நம் ஒருவர் வாழ்க்கையை வாழவே வலிமையற்ற போது இவரது நாவல்கள் மூலம் மற்றொருவராக வாழ்வது மிக மிகக் கடினம். எனது இந்தியா என்ற வரலாற்று நூல் தற்போது வாசிப்பில் உள்ளது இதில் குறிப்பிட்டிருக்கும் நில அளவை குறித்த விபரங்கள், ஐஸ் அவூஸ் பற்றிய குறிப்புகள் இதுவரை கேள்விபடாதது இந்த நூலை படிக்காவிட்டால் என் வாழ்நாளில் இந்தியா குறித்த பல தகவல்கள் தெரிந்து கொள்ளப் படமாலே போயிருக்கும். நாவலுக்கு முன்பு சிறுகதைகள் தொகுப்புகளையாவது முடிப்போமென்று பதினெட்டாம் நூற்றாண்டின் மழை நூலில் விழுந்தேன்.
கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு என்பதாகத் தொடங்கும் அவர் முன்னுரை சுவாரசியமான நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துகின்றன. சில வரிகளை மறுபடி மறுபடி வாய் வாசித்துக் கொண்டிருக்க மனம் கதையிலிருந்து விடுபட்ட பட்டம் போலப் பல சம்பவங்களின் முடிச்சுகளைப் பற்றி அசை போட வைக்கிறது. பல இதழ்களில் வெளிவந்த கதைகள் தொகுப்பப்பட்ட இந்த நூலில் 27 சிறுகதைகள் 27 பிம்பங்களைப் பிரதிபலிக்கும் சமூகக் கட்டமைப்புகளாக விரிகிறது. சோகத்தைத் தருமா சந்தோசத்தைத் தருமா என்ற எண்ண ஓட்டங்களில் தொடங்கிய எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் உபயோகித்த மொழியும் சமபவ கோர்வைகளும் கதாப்பாத்திரங்களின் நளினங்களும் புனைவின் சாரங்களும் அதிகமாக என்னை ஈர்த்தது என்று சொல்லலாம்.
வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை என்ற கதையில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவை மட்டுமே தெரிகிற ஒரு மனிதனுக்கு அது ஒரு வியாதியாகத் தெரிந்து பின் அதுவே வரமாகத் தெரிவதாகக் கதை முடிந்தாலும் அதைச் சுற்றி பலவாறு சிந்திக்க வைக்கும் வாக்கியங்கள் மனசாட்சியை உலுக்குவது உண்மை. '' உண்மையில் உலகம் எதற்காக இத்தனை பெரிதாகவும் தொடர்பற்ற ஆயிரக்கணக்கான இயக்கங்களோடும் இருக்கிறது, அதனால் தனக்கு என்ன பலன் என்ற சலிப்பு வந்தது'' என்ற வாக்கியம் எத்தனை அபத்தமாகச் சுயநலம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. என்னைச் சாம்பல் கிண்ணம் போல உபயோகிக்கிறார்கள் என்ற கதையில் அடையாளமில்லாத ஒரு ஆண் எவ்வாறொல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது (எடுபிடியென்று சிலர் வைத்திருப்பார்களே அதைப் போல). அவனே அநீதிகள் பற்றி மூன்று கற்பனை கதைகளைச் சொல்லி இதில் பொய் பெயர்கள் இருந்தாலும் அதில் உங்களில் யார் பெயராக மாற்றினாலும் அதை உண்மையாக்கி கொள்ளலாமென்று சொல்லி நமக்கும் சாம்பல கிண்ணமாகிறான். வரலாற்றில் கால் பதித்த ஓரினச் செயற்கையாளர்களான கில்ஜி - மாலிக்காபூரின் அழிவு, பூமியின் கண்களே குளங்கள் என்ற சித்தார்த்தர் புத்தரான சம்பவங்களைப் புனைவுகளாக்கி சுவைபடக் கொடுத்துள்ளார்.
பிறந்து வளர்ந்த கிராமத்தில்தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கும் வயதானவரிகளின் எண்ணப் போக்கை பற்றியும் இரு கதைகள் பேசுகின்றன. தங்களை அடிக்கும் ஆண்களுக்கு உடல் நிலை சரியில்லையென்றாலும் கடவுளிடம் மன்றாடும் பெண்களின் செய்கையை அப்படியே பிரதிபலிக்கிறது காதுள்ள கடவுள் கதை. செளந்திரவல்லியின் மீசை, 40 வயதில் பிறந்தநாள் வாழ்த்து கூடப் பெற முடியாத இரு குழந்தைகளின் தாய் ஜி சிந்தாமணி ஒரு நாள் பிடித்த நடிகை தேவிகாவாகப் பிடித்த இடத்திற்குச் சென்று பிடித்ததைச் சாப்பிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும் போது காட்டும் ஏக்கம், ஆண்களின் தெருவில் வீட்டிற்குள்ளே வாழ்ந்து இறக்கும் தாய், அலுவலகபணம் ஆறு லட்சத்தைத் தொலைத்த ஒருவரை புறக்கணிக்கும் அலுவலகர்கள் நண்பர்கள் மனைவி மக்கள், சுவருக்குள்ளே வீட்டின் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அம்மாவை போன்ற ஆணி, அன்பை உணராமல் அதிசயத்தைப் பரிசளிக்கப் பொருளை தேடும் கணவன் மனைவி, தோல்வியை மட்டுமே சிந்தித்துத் தீப்பெட்டியை வீணாய் உரசியே பொழுதை கழிப்பவரின் தனிமை போக்க தீக்குச்சி எரியும் போது வரும் சிறு மஞ்சல் கொக்கு, அருவருக்கத் தக்க தன்னை விற்றுக் கொள்ளும் கம்பிளி பூச்சியைத் தின்னும் நம்மிள் ஒருவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகளின் வழி நடப்பில் நம்மோடு உலகில் வாழும் உயிர்களை வரிசையாக அடுக்கி கொண்டே செல்கிறார்.
அப்பா புகைக்கிறார், உதிரி பொய்கள் என்னும் கதைகளில் குழந்தைகளின் பால்யத்தில் படும் காயம் ஆறாமல் அதைச் சுற்றி எரியும் நெருப்பாகக் கனன்று கொண்டேயிருப்பதை ஏதார்த்தமாகச் சொல்லி முகத்தில் அறைகிறார். இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன என்பது மிக மிக்கியமான கதை. கர்ப்பம் தரித்தபின் சண்டை அதிகமிட்டதால் அழுதாலோ என்னவோ தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தை பேசாமல் எதையோ வெறித்தப்படியே இருக்கிறது. பல இடங்களுக்குச் சுற்றியபிறகு பறவையின் சத்தத்தைக் கவனிக்கிறாள் என்பதை உணர்ந்து விதவிதமான பறவைகளைக் காண அலைகிறார்கள் ஒரிரு சொற்களைப் பேசுகிறாள் இன்னும் அவளைப் பேச வைக்கக் கூடிய பறவைகள் இருக்கின்றன அவற்றைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. மற்றொரு கதை விசித்ரி 12 வயதில் பின் மதியத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் உடலில் துணி இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்தவள் தினமும் முப்பது உடைகளை அணிந்து கொள்கிறாள் சணலால் கட்டி கொள்கிறாள் மேலும் ஒரு படி போய்ச் சதையோடு துணியைத் தைக்க முயல்கிறாள் 47 வயது வந்தும் இப்படியே அவள் இருப்பதற்கு அவள் ஊர் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ அந்த ஆள் மேசமானவன் இவன் அந்த விசயத்தில் வீக் என்று பலரை சந்தேகிக்கிறது. இறுதிவரை தெரியாத அந்தச் சம்பவத்தால் பின் மதியத்தில் வக்கிர எண்ணங்களைக் காட்டும் கணக்கற்றோரை இன்னும் கண்டும் காணாமலும்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
முத்தாய்ப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ஆழமாகக் காட்டை வர்ணிக்கிறது. வலேசா மதம் மாற்றுவதற்காகப் பழங்குடியினரின் குடியிருப்புக்குச் செல்கிறான் அவர்களின் மொழியைக் கற்ற பிறகு பிரசங்கிக்கலாம் என்று கற்கிறான் ஒவ்வொரு பெளர்ணமிக்கு பிறகும் அது மறந்துவிடும் அது எங்கள் முன்னோர்கள் அவர்கள் நாக்கில் வந்து போகிறார்கள் என்கிறார்கள். மீண்டும் முயல்கிறான் ஏட்டில் பிரதி எடுக்கிறேன் மீண்டும் மறக்கிறான் வெறிபிடித்தவன் போல மொழை எப்படியாவது கற்க வேண்டுமெனக் காடெங்கும் அழைகிறான் அதிகமான மழை பொழிகிறது பிறகுதான் கவனிக்கிறான் காடும் அவர்களின் மொழியில் மனிதனை போல இணைந்திருக்கிறது. முதலில் காட்டைப் பற்றி அறிய வேண்டி செடி கொடிகளோடும் உலாவுகிறான் வானத்தை அறிகிறான் ஒரு பழங்குடி பெண்ணோடு கலக்கிறான் நோய் வந்து சாகக் கிடப்பவனைக் காப்பாற்றி நோயை ஆமைக்கு மாற்றி விடுகிறார்கள். பிரசங்கம் மதமாற்றம் மறந்து அவர்களின் ஒருவனாகி அவர்களோடு வேட்டைக்குச் சென்ற பிறகு மிசனரியிலிந்து வந்து விசாரித்து விட்டு செல்கிறார்கள். பிறகு காணாமல் போய் விடுகிறான். அவர்களின் மொழியைக் கற்க வந்தவன் அவர்களின் மொழியாக அவன் வாரிசின் நாக்கில் பேசப்படப் போகிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லி செல்கிறது கதை. வனத்துக்கும் பழங்குடியினருக்கும் இருக்கும் புரிதலை கதையெங்கும் குறித்துக் கொண்டே வருகிறார். ஒவ்வொரு வரியும் குறிப்பால் உணர கூடியவை உவமைகள் தளும்பி நிற்கும் எதிர்பார்ப்பை உரசி கற்பனைக்குச் சிறகு கொடுக்கிறது.
பதினொட்டாம் நூற்றாண்டின் மழை என்னை நீந்த அனுமதித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக