கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்திற்குத் திரும்பும் வழி இது.

430 பக்கம் இல்ல இல்ல 430 பகல்களும் இரவுகளும் தொடர்ந்து தேவை இப்பித்தன் பாண்டியோடு கடல் காடு மலை பாறை மழைனு பித்துப்பிடித்தது போல் சுத்த வைத்து விடுவார் ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்கள்.
மனிதர் வாழ்ந்திருக்கார் பாண்டியாகக் கவிதைக்காக உவமைக்காக அழகியலுக்காக உணர்வியலுக்காக. ஒரு ஆணின் முழு வாழ்க்கையின்மன போராட்டத்தையும் பித்தனான அவன் கனவுகளுக்குள் சென்று விடுமாறு மாயப் பிம்பத்தை உருவாக்கி நிஜத்தில் உலாவ விட்டுருக்கிறார்.கன்னியை ஒரே மூச்சில் படிக்கச் சொன்னார் இப்புத்தகத்தை இவர் பதிந்த ஒரு பதிவை பார்த்துதான் வாங்கினேன் தோழர் Madhan Sendhil. பித்துப்பிடித்துப் போகவானு கேட்டேன். முழுவதையும் ஐந்து மாதமாக விட்டு விட்டு படிக்கும் பாக்கியம்தான் கிடைத்தது. ஒரே மூச்சில் படிப்பதும்பெரும் வரம் பெற்ற சாபம்தான்.
இடையில் சில சில பகுதிகள் புரிந்து கொள்ளவதே பெரும் சவால்தான் மனசாட்சியைச் சமாதான படுத்தித் தாவி தாவி சென்றேன். கடல் காடுமலை மழைனு சுத்த வைத்து இடையில் வரும் தாதி, அழகு மங்கை, சிப்பி, மான், கரடி ஒவ்வொருவரோடு உரையாடி அழுது மகிழ்ந்துனுகரைய வைத்திருக்கிறார். ஒவ்வொரு பாராவையும் வாசித்தால் நூறு குறிப்புகள் உவமைகளாவது கிடைக்கும். இடை இடையே வரும்கனவுகளில் நடக்கும் இலக்கற்ற பயணங்கள் காட்சிகளாக உருமாறி என்னையும் கடத்தி சென்றது உண்மை சுகமான அனுபவம். இன்னும்அதிகம் ஆழ்ந்து படித்திருக்கலாம். இலக்கிய நாவலாம் இலக்கியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது ஆனால் உள்நுழைய எவ்வளவு சிக்கலோஅதை விடப் பல மடங்கு சிரமம் கற்பனையிலிருந்து வெளிவருவதும்.
கன்னியின் நாயகன் சிறு வயது முதல் அமலா அக்கா அன்போடும் பாசத்தோடும் (பெரியம்மா மகள்) உடன் ஒன்றி வாழ்ந்து பின்பு பிரிந்து சிலநாட்கள் சாரா என்ற பெண்ணோடு அன்போடு காதல் பித்தில் ஒன்றி பிரிகிறார். இரு பெண்களின் பிரிவும் பித்தை தலைக்கேற்ற அவனின்கனவில் நிகழும் காட்சிகளோடு இணைத்து நிஜத்தை அவ்வப்போது சொல்வது போல் நகர்கிறது கதை.
இரு பெண்களும் கன்னியாஸ்திரியாகிறார்கள்.
பெண்களின் அன்பால் ஒருவன் எப்படிப் பித்தாகி அழைந்து தன்னிலை மறந்து கிடக்கிறான் என்பதை அவனுலகில் நுழைந்து முற்றிலும்பயணிக்கவைத்து நம்மையும் பித்துபிடிக்க வைத்து விடுகிறார்.
சில நாட்களில் சாராவுடனான காதல் ஊடல் பிரிவு சங்கடம் அவஸ்தை என்று நகரும் காட்சிகளின் வர்ணனை மீச்சிறப்பான உணர்வை புரட்டிஎடுக்கிறது.
இன்னும் இரண்டு முறையாவது பாண்டியின் பித்துக்குள் மூழ்கி எழனும்.
முடித்தவரை வாசிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.
சீதா
ஜெ.பிரான்சிஸ் கிருபா
சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்திற்குத் திரும்பும் வழி இது.

430 பக்கம் இல்ல இல்ல 430 பகல்களும் இரவுகளும் தொடர்ந்து தேவை இப்பித்தன் பாண்டியோடு கடல் காடு மலை பாறை மழைனு பித்துப்பிடித்தது போல் சுத்த வைத்து விடுவார் ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்கள்.
மனிதர் வாழ்ந்திருக்கார் பாண்டியாகக் கவிதைக்காக உவமைக்காக அழகியலுக்காக உணர்வியலுக்காக. ஒரு ஆணின் முழு வாழ்க்கையின்மன போராட்டத்தையும் பித்தனான அவன் கனவுகளுக்குள் சென்று விடுமாறு மாயப் பிம்பத்தை உருவாக்கி நிஜத்தில் உலாவ விட்டுருக்கிறார்.கன்னியை ஒரே மூச்சில் படிக்கச் சொன்னார் இப்புத்தகத்தை இவர் பதிந்த ஒரு பதிவை பார்த்துதான் வாங்கினேன் தோழர் Madhan Sendhil. பித்துப்பிடித்துப் போகவானு கேட்டேன். முழுவதையும் ஐந்து மாதமாக விட்டு விட்டு படிக்கும் பாக்கியம்தான் கிடைத்தது. ஒரே மூச்சில் படிப்பதும்பெரும் வரம் பெற்ற சாபம்தான்.
இடையில் சில சில பகுதிகள் புரிந்து கொள்ளவதே பெரும் சவால்தான் மனசாட்சியைச் சமாதான படுத்தித் தாவி தாவி சென்றேன். கடல் காடுமலை மழைனு சுத்த வைத்து இடையில் வரும் தாதி, அழகு மங்கை, சிப்பி, மான், கரடி ஒவ்வொருவரோடு உரையாடி அழுது மகிழ்ந்துனுகரைய வைத்திருக்கிறார். ஒவ்வொரு பாராவையும் வாசித்தால் நூறு குறிப்புகள் உவமைகளாவது கிடைக்கும். இடை இடையே வரும்கனவுகளில் நடக்கும் இலக்கற்ற பயணங்கள் காட்சிகளாக உருமாறி என்னையும் கடத்தி சென்றது உண்மை சுகமான அனுபவம். இன்னும்அதிகம் ஆழ்ந்து படித்திருக்கலாம். இலக்கிய நாவலாம் இலக்கியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது ஆனால் உள்நுழைய எவ்வளவு சிக்கலோஅதை விடப் பல மடங்கு சிரமம் கற்பனையிலிருந்து வெளிவருவதும்.
கன்னியின் நாயகன் சிறு வயது முதல் அமலா அக்கா அன்போடும் பாசத்தோடும் (பெரியம்மா மகள்) உடன் ஒன்றி வாழ்ந்து பின்பு பிரிந்து சிலநாட்கள் சாரா என்ற பெண்ணோடு அன்போடு காதல் பித்தில் ஒன்றி பிரிகிறார். இரு பெண்களின் பிரிவும் பித்தை தலைக்கேற்ற அவனின்கனவில் நிகழும் காட்சிகளோடு இணைத்து நிஜத்தை அவ்வப்போது சொல்வது போல் நகர்கிறது கதை.
இரு பெண்களும் கன்னியாஸ்திரியாகிறார்கள்.
பெண்களின் அன்பால் ஒருவன் எப்படிப் பித்தாகி அழைந்து தன்னிலை மறந்து கிடக்கிறான் என்பதை அவனுலகில் நுழைந்து முற்றிலும்பயணிக்கவைத்து நம்மையும் பித்துபிடிக்க வைத்து விடுகிறார்.
சில நாட்களில் சாராவுடனான காதல் ஊடல் பிரிவு சங்கடம் அவஸ்தை என்று நகரும் காட்சிகளின் வர்ணனை மீச்சிறப்பான உணர்வை புரட்டிஎடுக்கிறது.
இன்னும் இரண்டு முறையாவது பாண்டியின் பித்துக்குள் மூழ்கி எழனும்.
முடித்தவரை வாசிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.
சீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக