எனக்கு ஏன் கனவு வருது
எஸ்.ராமகிருஸ்ணன்
எண்ணம் : ஆர்.ஆகாஸ்
விலை - 35/-

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஸ்ணன் என்னும் எஸ்ரா அவர்கள் சிறுவர்களுக்கென்று எழுதிய ஏழு புத்தகங்களுக்குள் ஒன்று.
எழுத்துலகின் ஆளுமை எஸ்ரா அவர்களுக்கென்று தனித்தன்மை உண்டு. பின் அட்டை படத்திலே புத்தகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார்.
" இந்த உலகில் எத்தனை கதைகள் இருக்கின்றன ?
இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதிலை சொல்லவே முடியாது. காரணம், உலகின் மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகம்"
எனபவர் இக்கதையைத் தன் மகன் ஆகாஷ் அவர்களோடு இணைந்து அவர் கொடுத்த கதாப்பாத்திரங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் சேர்ந்து பேசி ஒன்றிணைத்து எழுத்துருவம் கொடுத்திருக்கும் அவர் " உங்கள் குழந்தைகளுக்கு இது போலக் கதை சொல்லும் திறனும் எழுதும் திறனும் இருக்கக் கூடும். அதை அடையாளம் கண்டு கொண்டாட வேண்டும் என்பதே இந்த முயற்சிக்கான முக்கியக் காரணம்" என்கிறார்.
குழந்தைகளின் தலை வாலற்ற கேள்விகளுக்குப் பதில் அளித்துத் திருப்தி படுத்துபவர்களுக்கு ஆதித கற்பனைத் திறன் வேண்டும். அதிலும் கடல், கனவு குறித்த கேள்விகளுக்கு அவர்களின் விளையாட்டு உலகில் சென்று தெளிவான விளக்கங்களில் விளையாட விட்டு சிந்திக்கும் வழி அமைத்து அழைத்து வந்து விடுகிறார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒவ்வொரு கற்பனை மிகுந்த கனவு உலகமுண்டு. வளர வளர தரை மட்டமாகும் ஆனாலும் பால்யத்தில் பதிந்த கற்பனை கதாபாத்திரங்களின் குணதிசயங்களைப் பொறுத்தியே நாம் அடுத்தவர்களை அலசும் அணுகுமுறைகள் அமையும், காரணமின்றி ஒருவரை பிடிக்கவும் ஒருவரை வெறுக்கவும் செய்துவிடுவதுவும் இப்படியானவைகளால்தான். இக்கதை வழி பயணிக்கும் குட்டி மீன் என்னையும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது துடுக்கு தனமான ஆழ் அறிவின் கேள்விகளாகக் கனவு குறித்துக் கேள்வி கேட்டுக் கொண்டே பயணிக்கிறது, சளைக்காமல் பதிலடிகளையும் கொடுத்துக் கொண்டே நகர்கிறது. கடலுக்குள்ளும் கனவுக்குள்ளும் இன்னும் நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய பல அதிசயங்கள் கிடந்தாலும் அதைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டி பல கலவை எண்ணங்களையும் புகுத்தி விடுகிறது.
குழந்தைகளுக்கு இது போலான நல்ல நூல்களின் வாசிப்பை ஊட்டி சிந்திக்கும் ஊட்டச்சத்தைக் கொடுத்து எழுத்தின் மீது நம்பிக்கையை அளித்துச் சுயமாக எதையும் செய்யத் திடம் கொடுக்க வேண்டியது பொற்றோர்களான நம் கடமை.
மிகச் சுவாரசியமான நடையுடன் சர சரவெனக் கடலில் நீந்தி கனவின் விதையை எடுக்க வைத்து விடும். குழந்தைகளுக்குக் கொடுக்குமுன் நீங்களும் ஒருமுறை படிச்சிடுங்க. நம் உலகை விட அவர்கள் உலகில்தான் அதிசயம் அனேகம் கொட்டிக் கிடக்கிறது. குழந்தை கேள்வி கேட்டுத் திருத் திரு முழிச்சோம்னா அவ்வளவுதான் ''உங்களுக்கு இது கூடத் தெரியாதா'' னு கேட்டுடுவாங்க.
எஸ்.ராமகிருஸ்ணன்
எண்ணம் : ஆர்.ஆகாஸ்
விலை - 35/-

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஸ்ணன் என்னும் எஸ்ரா அவர்கள் சிறுவர்களுக்கென்று எழுதிய ஏழு புத்தகங்களுக்குள் ஒன்று.
எழுத்துலகின் ஆளுமை எஸ்ரா அவர்களுக்கென்று தனித்தன்மை உண்டு. பின் அட்டை படத்திலே புத்தகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார்.
" இந்த உலகில் எத்தனை கதைகள் இருக்கின்றன ?
இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதிலை சொல்லவே முடியாது. காரணம், உலகின் மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகம்"
எனபவர் இக்கதையைத் தன் மகன் ஆகாஷ் அவர்களோடு இணைந்து அவர் கொடுத்த கதாப்பாத்திரங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் சேர்ந்து பேசி ஒன்றிணைத்து எழுத்துருவம் கொடுத்திருக்கும் அவர் " உங்கள் குழந்தைகளுக்கு இது போலக் கதை சொல்லும் திறனும் எழுதும் திறனும் இருக்கக் கூடும். அதை அடையாளம் கண்டு கொண்டாட வேண்டும் என்பதே இந்த முயற்சிக்கான முக்கியக் காரணம்" என்கிறார்.
குழந்தைகளின் தலை வாலற்ற கேள்விகளுக்குப் பதில் அளித்துத் திருப்தி படுத்துபவர்களுக்கு ஆதித கற்பனைத் திறன் வேண்டும். அதிலும் கடல், கனவு குறித்த கேள்விகளுக்கு அவர்களின் விளையாட்டு உலகில் சென்று தெளிவான விளக்கங்களில் விளையாட விட்டு சிந்திக்கும் வழி அமைத்து அழைத்து வந்து விடுகிறார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒவ்வொரு கற்பனை மிகுந்த கனவு உலகமுண்டு. வளர வளர தரை மட்டமாகும் ஆனாலும் பால்யத்தில் பதிந்த கற்பனை கதாபாத்திரங்களின் குணதிசயங்களைப் பொறுத்தியே நாம் அடுத்தவர்களை அலசும் அணுகுமுறைகள் அமையும், காரணமின்றி ஒருவரை பிடிக்கவும் ஒருவரை வெறுக்கவும் செய்துவிடுவதுவும் இப்படியானவைகளால்தான். இக்கதை வழி பயணிக்கும் குட்டி மீன் என்னையும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது துடுக்கு தனமான ஆழ் அறிவின் கேள்விகளாகக் கனவு குறித்துக் கேள்வி கேட்டுக் கொண்டே பயணிக்கிறது, சளைக்காமல் பதிலடிகளையும் கொடுத்துக் கொண்டே நகர்கிறது. கடலுக்குள்ளும் கனவுக்குள்ளும் இன்னும் நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய பல அதிசயங்கள் கிடந்தாலும் அதைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டி பல கலவை எண்ணங்களையும் புகுத்தி விடுகிறது.
குழந்தைகளுக்கு இது போலான நல்ல நூல்களின் வாசிப்பை ஊட்டி சிந்திக்கும் ஊட்டச்சத்தைக் கொடுத்து எழுத்தின் மீது நம்பிக்கையை அளித்துச் சுயமாக எதையும் செய்யத் திடம் கொடுக்க வேண்டியது பொற்றோர்களான நம் கடமை.
மிகச் சுவாரசியமான நடையுடன் சர சரவெனக் கடலில் நீந்தி கனவின் விதையை எடுக்க வைத்து விடும். குழந்தைகளுக்குக் கொடுக்குமுன் நீங்களும் ஒருமுறை படிச்சிடுங்க. நம் உலகை விட அவர்கள் உலகில்தான் அதிசயம் அனேகம் கொட்டிக் கிடக்கிறது. குழந்தை கேள்வி கேட்டுத் திருத் திரு முழிச்சோம்னா அவ்வளவுதான் ''உங்களுக்கு இது கூடத் தெரியாதா'' னு கேட்டுடுவாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக